Home இலங்கை தலைமன்னாரிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை.

தலைமன்னாரிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை.

by admin

தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக  படகு ஒன்றில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள்  அவர்களை தேடி வருகின்றனர்.

குறித்த மீனவர்களை   தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (12) மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் இப் பகுதி மீனவர்கள் கடலில் இவர்களை தேடுவதில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை (13) மாலை வரை அவர்கள்  கண்டு  பிடிக்கப்படவில்லை  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் காற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக உடன் கரை திரும்ப முடியாத நிலையில் கச்சத்தீவில் தரித்து நிற்பாகத்   தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன இரு மீனவர்களும் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான ஜே.நிக்சன் டிலக்ஸ் கூஞ்ஞ மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரி. சுமித்திரன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More