Home இலங்கை கிளிநொச்சியில் காணாமல் போன காவல்துறை அதிகாரி   சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் காணாமல் போன காவல்துறை அதிகாரி   சடலமாக மீட்பு

by admin

 

கிளிநொச்சி – மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்களை சுற்றிவளைக்கச் சென்ற  நிலையில் காணாமல் போன காவல்துறை அதிகாரி   சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

நேற்றைய தினத்திலிருந்து காணாமால் போன அவா்   புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி  காவல்  நிலையத்தில் கடமையாற்றி வந்த   மாத்தறையைச்  சேர்ந்த 28 வயதான சதுரங்க எனும்  காவல்துறை அதிகாரி எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என    காவல்துறையினா் தொிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More