Home இலங்கைவாகனத்தை வழிமறித்து  சாரதியை   தாக்கிய மூவர் கைது

வாகனத்தை வழிமறித்து  சாரதியை   தாக்கிய மூவர் கைது

by admin

 

பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் வழி மறித்து , சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி , சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய்  காவல்துறையினர் , தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மானிப்பாய், கல்வியங்காடு மற்றும் மணியந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More