Home உலகம் கனடாவிலிருந்து இந்தியா செல்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா  நிறுத்தியுள்ளது

கனடாவிலிருந்து இந்தியா செல்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா  நிறுத்தியுள்ளது

by admin

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம்   அதிகரித்துள்ள  நிலையில் . கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா  நிறுத்தியிருக்கிறது.

 கடந்த ஜூன் 18ஆம்  திகதி கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார்     சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள துடன்  இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய அரசு  , கனடா தூதரகத்தின்  சிரேஸ்ட அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 இந்தநிலையிலேயே கனடாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக இந்திய விசா வழங்கும் சேவை மையம் வெளியிட்டிருக்கும் குறிப்பில், “செயல்பாட்டு காரணங்களுக்காக செப்டம்பர் 21-ஆம்  திகதி  முதல்  மறு அறிவிப்த்தல் வரை இந்தியாவுக்கு செல்லும் விசா வழங்கும் சேவை   நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More