Home இலங்கை சாவகச்சேரியில் கண்டி வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த பழமையான மரம்

சாவகச்சேரியில் கண்டி வீதிக்கு குறுக்கே முறிந்து விழுந்த பழமையான மரம்

by admin
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில், மரம் முறிந்து விழுந்தமையால் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் தடைபட்டு இருந்ததுடன் , நகருக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர் பகுதியில் நின்ற சுமார் 200 வருட காலத்திற்கு மேற்பட்ட வேப்ப மரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முறிந்து வீதிக்கு குறுக்கே விழுந்துள்ளது.  அதனால் யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டது. அத்துடன் மின்சார வயர்களுக்கும் மேலும் மர கிளைகள் விழுந்தமையால் , மின்சார கம்பங்கள் முறிவடைந்ததுடன் , நகர் பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டது.
அத்துடன் மரத்திற்கு கீழ் இருந்த அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பு டிக்கெட் விற்கும் கடையும் சேதமடைந்ததுடன் , மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.  சாவகச்சேரி நகர சபை , இலங்கை மின்சார சபையினர், நகர் பகுதி வர்த்தகர்கள்,  பொதுமக்கள் ஆகியோர் இணைந்து முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியதுடன் , வீதி ஊடான போக்குவரத்தை சீர் செய்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More