Home இலங்கை பல்கலைக்கழக விடுதிகளில் இரவு வேளை சோதனை

பல்கலைக்கழக விடுதிகளில் இரவு வேளை சோதனை

by admin

 

பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு ட்படுத்த தீர்மானிக்த்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளை தடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 05 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவிலான பகிடிவதைகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதாக  இவா் தொிவித்துள்ளாா்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது  பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகள் மற்றும் மாணவ ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகலும்  அவர்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் வாகன வசதிகள் வழங்கப்படும் எனவும் சுரேன் ராகவன்  தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்கான தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.  பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக   வட்ஸ் அப்  இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும்  கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விரைவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும்  சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More