Home இலங்கை ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை

ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை

by admin

 

நான்கு வருடங்களுக்கு முன்னர், மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை  கடத்தியமை  மற்றும் அதனை  வைத்திருந்தமை  ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்ட  09 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள்  80 கிராம் ஹெரோயின்  போதைப்பொருளை    இலங்கைக்கு கடத்திய  குற்றத்தை ஒப்புக்கொண்டதனை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளாா்.

.மேலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ள  சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் குறித்த சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் பிரதிவாதிகளை  ஈரானுக்கு நாடு கடத்தவும்  உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ​​பிரதிவாதிகள் சார்பில்  முன்னிலையான சட்டத்தரணிகள், பிரதிவாதிகள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More