Home இலங்கை காணாமல் போன   மகனைத் தேடிவந்த தந்தை உயிாிழப்பு

காணாமல் போன   மகனைத் தேடிவந்த தந்தை உயிாிழப்பு

by admin

 

காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை  ஒருவா்  சுகவீனம் காரணமாக உயிாிழந்துள்ளார்.    வவுனியா மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது65)  என்பவரே இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.

இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார்  என்பவா் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.     வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும்  போராட்டங்களில்   கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடிக் கொண்டிருந்த    நிலையில் மகனை காணாமலேயே அவர்  உயிாிழந்துள்ளாா்.

தங்களுடைய உறவுகளைத் தேடி போராட்டங்களில் ஈடுபடுகின்ற காணாமல் போனவர்களின் உறவினர்களில் பலரும் தமது  உறவுகளைக்  காணாமலே உயிாிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More