Home இலங்கை ஹர்த்தாலுக்கு முஸ்லீம் மக்களின் ஆதரவை பெறவும் தீவிர நடவடிக்கை

ஹர்த்தாலுக்கு முஸ்லீம் மக்களின் ஆதரவை பெறவும் தீவிர நடவடிக்கை

நீதிபதி விவகாரம் - குற்ற புலனாய்வு பிரிவின் அறிக்கையை பொருட்டாகவே எடுக்கவில்லை

by admin

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தாலை பெருமெடுப்பில், மேற்கொள்ளவுள்ளதாகவும் , அதற்கு வடக்கு – கிழக்கில் வசிக்கும் தமிழ், முஸ்லீம் மக்களின் ஆதரவை வேண்டி நிற்பதாக, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கான நீதி என்பது தொடர்ந்து மறுதலிக்கப்படுகிறது. சிங்கள பௌத்தமக்கள் வாழாத தமிழ், முஸ்லிம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் தொடர்ச்சியாக காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் நிறுவுவதற்கான வேலைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.  அவ்வாறான அத்துமீறல்களை கண்டித்தும்,  மட்டக்களப்பு  மயிலத்தமடு  மேய்ச்சல் தரைபிரச்சினைக்கு  தீர்வு  கோரியும்  எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடைபெறவுள்ளது.

ஹர்த்தால் ஏற்பாடுகள் தொடர்பில், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரணுடனும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுடனும் தொலைபேசியில் கலந்து பேசி உள்ளோம்.  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஹர்தால் தொடர்பான அடுத்த கட்டம் நடவடிக்கை தொடர்பாகவும்  ஆராயவுள்ளோம். இங்கிருந்து கிழக்கு மாகாணத்துக்கு சென்று ஹார்த்தலை முன்னெடுக்க பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.

  ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீதிபதி விவகாரம் – குற்ற புலனாய்வு பிரிவின் அறிக்கையை பொருட்டாகவே எடுக்கவில்லை

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் பெற்றது.கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாக பார்க்க முடியாது. நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்த சிங்கள அரசாலும், அரச இயந்திரத்தாலும், அவமதிக்கப்படுகின்றது என்ற  விடயத்தையே எடுத்துக் காட்டுகிறது.தமிழ் மக்களுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாக வெளி வந்ததுள்ளது.
அது போல் தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம். மேலும் தற்பொழுது கொழும்பில் இருக்கக் கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More