Home இலங்கை நெடுந்தீவில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

தலைமன்னார் கடற்பரப்பில்  வைத்து ராமேஸ்வரத்தை சேர்ந்த 03 படகுகளும்   23 மீனவர்களும் கைது

by admin
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இலங்கை கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை நெடுந்தீவுக்கு அண்மையில் இரண்டு படகுகளில் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த 14 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களையும் , அவர்களது படகுகளையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் , கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை யாழ். மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை இலங்கை கடற்பரப்பில் சீன உளவு  கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து நேற்று (28) மாலையில் இருந்து இலங்கை கடற்படையினர் இலங்கையின் பல்வேறு கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில்  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தலைமன்னார் கடற்பரப்பில்  வைத்து ராமேஸ்வரத்தை சேர்ந்த 03 படகுகளும்  அதிலிருந்து 23 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த 14ம் திகதியில் இருந்து நேற்று (28) மாலை  வரை   இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 10 விசைப்படகுகளும் அதிலிருந்து 64 மீனவர்கள் இலங்கை கடற்படை  கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More