Home இலங்கை தாயகம் திரும்பிய மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

தாயகம் திரும்பிய மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

by admin

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய யாழ்ப்பாணம், குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

போர் காரணமாக குடத்தனை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா நாகேஸ்வரி , அவரது மகளான சின்னராஜா சுதர்சினி மகனான சின்ன ராஜா சுதாகரன் ஆகியோர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தனர்.

33 வருடங்களின் பின்னர் மீண்டும் படகு மூலமாக தாயகம் திரும்பி குடத்தனை பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றில் தங்கி இருந்த போது பருத்தித்துறை காவல்துறையினரால் கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மறுநாள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை அழைக்கப்பட்ட போது , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர் அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து மூவரையும் மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து மன்று உத்தரவிட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More