Home இலங்கை மாவீரர் நினைவேந்தலுக்கு எதிரான வழக்கு மட்டக்களப்பில் நிராகரிப்பு!

மாவீரர் நினைவேந்தலுக்கு எதிரான வழக்கு மட்டக்களப்பில் நிராகரிப்பு!

by admin

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்க கோரி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் காவற்துறையால்  விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று (17.1.23) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை காவற்துறையால்  மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடைவிதிக்குமாறு கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுணதீவு காவல் நிலையத்தை சேர்ந்த புலனாய்வாளர்கள் இரகசிய தகவலை தங்களுக்கு கொடுத்ததாக கூறி இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்கள்.

அந்த மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் என பலரின் பெயர்கள் அதிலே குறிப்படப்பட்டிருந்தாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஒரு குறித்த இடத்திலே நினைவேந்தல் நிகழ்வினை செய்வதற்கு தயாராகின்றனர் என்றும் அதனை தடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்கள் தான் நீதிமன்றிலே வேறு ஒரு வழக்கிற்காக சென்றிருந்த நிலையில் அந்த வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களுக்காக முன்னலையாகி அந்த விண்ணப்பத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்ததாக குறிப்பட்டுள்ளார்.

நீதிவான் நீதிமன்றிலிருந்து மற்றைய சட்டத்தரணிகளுடனும் தன்னுடன் முன்னிலையாகியதாகவும் தாம் அதனை வலுவாக எதிர்த்து நினைவேந்தல் செய்வது அனைவரதும் அடிப்படை உரிமை, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, விளக்கேற்றுவதை எந்த சட்டத்தினாலும் தடுக்க முடியாது என்றும் குற்றவியல் நடவடிக்கை கோவை 106 பிரிவின் கீழே புதிய தொல்லையை அகற்றுவதற்காகவே உள்ளது எனவும், இவ்வாறானவற்றுக்கு அது பொருத்தமற்றது என்பதையும் எடுத்துச் சொன்னதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விண்ணபங்கள் அடிப்படை உரிமையை மீறுகின்ற மாதிரியான விண்ணப்பங்கள் என்பதை தெரிவுபடுத்தியபோது நீதிவான் அதனை நிராகரித்து கட்டளையிட்டார்.

அதேபோன்று கொக்கட்டிச்சோலை காவற்துறையால் அந்த வாரம் முழுவதும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாட முயற்சிகள் நடப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் எனவும் காவற்துறையால் கோரிக்கை விடப்பட்டது.

ஆதற்கும் தாம்  சமர்ப்பணங்களை செய்ததாகவும், யாரது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு யாருக்கும் உரிமையுண்டும். இறந்தவர்கள் நினைவாக நினைவேந்தல் நடாத்துவதற்கும் உரிமையுண்டு. அதனை எந்த சட்டத்தினாலும் தடுக்க முடியாது வாதங்களை முன்வைத்த பிறகு நீதிவான் அந்த விண்ணப்பத்தையும் நிராகரித்தார்.

நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்காக காவற்துறையால் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. எந்தவித தடைகளும் இன்றி நினைவேந்தல்களை செய்ய முடியும்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More