Home இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி மரணம்!

சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு!

by admin

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29.11.23) உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த நபர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ம் திகதி கொக்கட்டிச்சோலை காவற்துறையினர்  கைது செய்து அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் சிறைச்சாலையில் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை (28.11.23) சிறைச்சாலையில் மயங்கி வீழ்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்ததுடன், சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடமான சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை (29.11.23) சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More