Home இலங்கை ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது!

ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது!

by admin

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் பொலிஸாரின் கெடுபிடிகளுக்குள்ளும் நேற்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினாலும், காடையர்களாலும், அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு அழைத்து அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேர் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாகவே உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஒதியமலைப் படுகொலையின் 39 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது..

நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்களால் அவர்களுக்கான நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து வழமை போல் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசையும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பட்டார்கள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வு வளாகத்திலும் ஆலய சூழலிலும் பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் புகைப்படங்கள் எடுத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More