Home இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்ட நால்வருக்கு பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்ட நால்வருக்கு பிணை

by admin

 

மட்டக்களப்பு – வந்தாறுமூலை  மாவீரர் துயிலும் இல்லத்தில்   மாவீரர் தினமான நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற  அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது   பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  இன்றையதினம் வழக்கு விசாரணை  வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது இவ்வாறு  பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை  காவல்துறையினரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்ததனைத் தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் M.I.M.ரிஸ்வான்  மேற்படி  நால்வருக்கும் பிணை வழங்கியுள்ளாா்.  இந்த வழக்கு மீண்டும் ஜனவரி முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More