Home இலங்கை நெல்லியடியில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை!

நெல்லியடியில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை!

இளைஞன் கைது!

by admin

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, இரண்டு நாட்கள் காவற்துறை  காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி பெற்று , காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். குறித்த இளைஞன் கடையில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவதாக நெல்லியடி காவற்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞனை கைது செய்த காவற்துறையினர் அவரது உடைமையில் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு இருந்தனர்.

விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இளைஞனை முற்படுத்திய காவற்துறையினர் , மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சந்தேகநபரை இரண்டு நாள் காவற்துறையின் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி என மன்றில் காவற்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட மன்று , சந்தேகநபரை காவற்துறை காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதித்துள்ளது.

காவற்துறை காவலில் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவற்துறையினர்  சந்தேகநபருடன் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை சேர்ந்தவர்களை இனம் கொண்டுள்ளதாகவும், சந்தேக நபரிடம் போதைப்பொருளை வாங்கி வந்தவர்களையும் இனம் கண்டுகொண்டுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More