Home இலங்கை 8 இந்திய மீனவர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை.

8 இந்திய மீனவர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை.

by admin

 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம்  நேற்று புதன்கிழமை(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டதன் பின்னர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த மீனவர்கள்  நேற்று (20) புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ‘ நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார்.  இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More