Home இலங்கை யாழ். மாவட்ட செயலகத்தில் நினைவேந்தல்

யாழ். மாவட்ட செயலகத்தில் நினைவேந்தல்

by admin
யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
 யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆழிப்பேரலையால் மரணித்தவர்களுக்காக சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ் மாவட்ட செயலர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More