Home இலங்கை இலங்கைக்கு கடத்தவிருந்த  பல லட்சம் பெறுமதியான  பொருட்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த  பல லட்சம் பெறுமதியான  பொருட்கள் பறிமுதல்

by admin

 

ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இன்று (29) இலங்கைக்கு கடத்தல் பொருள் கடத்த உள்ளதாக   கிடைத்த  ரகசிய தகவலையடுத்து மரைன்  காவல்துறையினர் புதுமடம் கடற்கரை பகுதிக்கு   சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

இதன்போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சோப்பு, எண்ணெய்,  வாசனை திரவியம் உள்ளிட்ட இந்திய பெறுமதியில் 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக  வாகனம் நிறுத்தி வைக்கப்படுகிறது தெரியவந்தது.

இதையடுத்து பொருட்களை  காவல்துறையினர்  பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More