Home இலங்கை பருத்தித்துறையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறை தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு - சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற நீதவான்!

by admin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.

அதேவேளை தடயவியல் காவற்துறையினரும் சம்பவ இடத்தில் தடயவியல் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பருத்தித்துறையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சிய சாலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மலையகம் , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய  வேலாயுதம் புவனேஸ்வரம் மற்றும் 38 வயதுடைய வேலாயுதம் ரவி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறை முனை பகுதியில் கடற்தொழில் உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்த களஞ்சிய சாலையில் இருவரும் உறங்கி கொண்டிருந்த வேளை தீ விபத்து ஏற்பட்டு இருவரும் , உறக்கத்திலையே தீயில் எரிந்து உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More