Home இலங்கை ஜனாதிபதியின் யாழ். பயணத்தின் போது போராட்டங்களுக்கு தடைகோரிய மனு நிராகரிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் யாழ். பயணத்தின் போது போராட்டங்களுக்கு தடைகோரிய மனு நிராகரிக்கப்பட்டது.

by admin

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ். பயணத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி காவற்துறையினர் விடுத்திருந்த கோரிக்கையை யாழ். நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சட்டத்தை மீறாத வகையில், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாகவும் நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.

ஜனாதிபதி நாளை முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரியே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் காவற்துறையினர்  வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றம் நேற்று பிறப்பித்திருந்த உத்தரவிற்கு அமைய, வழக்கின் 8 ஆவது பிரதிவாதியான தவத்திரு வேலன் சுவாமிகள் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகி தமது நிலைப்பாட்டினை தௌிவுபடுத்தியிருந்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More