Home இலங்கை காரைநகரில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாடு!

காரைநகரில் சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாடு!

காரைநகர் இளந்தொன்றல் விளையாட்டு கழகத்தினருக்கு பாராட்டு!

by admin

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் இளந்தொன்றல் விளையாட்டு கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன்,  அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் நோக்குடன் இளம் தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்டு, உற்பத்தி பொருட்களுடன் . ஒரு தொகை சட்ட விரோத மதுபானத்தையும் மீட்டு இருந்தனர்.

அதேவேளை, சட்டவிரோத மதுபானத்தை கொள்வனவு செய்து அவற்றை எடுத்து சென்ற இருவரை பிடித்து, அவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து நிலத்தில் ஊற்றியதுடன், அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டிற்கு காரைநகர் பிரதேச சபை இளம் தென்றல் விளையாட்டு கழகத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More