Home இலங்கை மன்னாரில் சிறுமி சடலமாக மீட்பு

மன்னாரில் சிறுமி சடலமாக மீட்பு

by admin

 

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில்   13 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று திங்கட்கிழமை(12) அதிகாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன குறித்த சிறுமி    வவுனியாவில்  மீட்கப்பட்டு நேற்று   ஞாயிற்றுக்கிழமை (11) அழைத்து வரப்பட்ட நிலையில் இன்று இந்த   துயர சம்பவம் இடம் பெற்றுள்ளமை தெரிய வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில் உள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போன நிலையில் சிறுமியின் பெற்றோர் மன்னார்  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி  வவுனியாவில் உள்ள சிறுவர் நிலையம் ஒன்றுக்கு சென்ற நிலையில்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  அங்கிருந்து மீட்கப்பட்டு மன்னார் எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வரப் பட்டுள்ளார்.

இந்த நிலையில்  இன்று  அதிகாலை  சிறுமி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்  சடலமாக   மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மன்னார்  காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் காவல்துறையினர்  சம்பவ இடத்துக்கு  சென்று சடலத்தை மீட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

-குறித்த சிறுமி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக மன்னார்  காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More