Home இலங்கை இருவர் சுட்டுக் கொலை –  இருவர் கைது.

இருவர் சுட்டுக் கொலை –  இருவர் கைது.

by admin




 

மன்னார் – அடம்பன்,முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்   இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக   காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதை உடைய குறித்த இருவரும் நேற்று(20) செவ்வாய்க்கிழமை மாலை    கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையினா்ர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி இந்த இரட்டைக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டு இருந்தது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-42) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவக்கை  கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) ஆகியோரே  உயிரிழந்திருந்தனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடம்பன் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More