Home இலங்கைவெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்து!

வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளட்ட மூவர் காயம்!

by admin

வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

அதில் ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு சென்ற மக்களுக்கு குடிநீர் வழங்க காவற்துறையினர் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு காவற்துறையினருக்கும், பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் காலை முதல் இடம்பெற்றன.

இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த காவற்துறையினர் ஆலய வளாகத்திற்குள் குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறு விளைவித்திருந்தனர். கடுமையான வாய்த்தர்க்கத்துக்கு மத்தியில் குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.

குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்கு உள்ளானதிலேயே மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More