Home இலங்கை புதிய நாடாளுமன்ற தேர்தல் முறைமை – அமைச்சரவை அனுமதி வழங்கியது!

புதிய நாடாளுமன்ற தேர்தல் முறைமை – அமைச்சரவை அனுமதி வழங்கியது!

by admin

புதிய நாடாளுமன்ற தேர்தல் முறைமை அறிமுகப்படுத்துவதற்கான அரசியலமைப்பு திருத்தங்களை முன்வைப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது FPTP (பெரும்பான்மை வாக்கு முறை) முறையின் கீழ் 160 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்தல் மேலும் மிகுதியான வேட்பாளர்களை. விகிதாசார பிரதிநிதித்துவம் மூலம் தெரிவு செய்யும் முறையாகும். தற்போது பாராளுமன்றம் 225  நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவை சமர்பித்தார். இந்த நோக்கத்திற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தால் அமுல்படுத்த ஒரு புதிய சட்டம் உருவாக்கப்படும். இது ஒரு கலப்பு தேர்தல் முறையாக இருக்கும்.

கடந்த காலங்களில், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் விருப்பு வாக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தற்போதைய தேர்தல் முறைக்கு மாற்றங்களைக் கொண்டுவர அப்போதைய அரசாங்கங்கள் முயங்சித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More