Home இலங்கை கூட ஸ்கொட்லாந்து யார்ட் காவற்துறை எங்கே?

கூட ஸ்கொட்லாந்து யார்ட் காவற்துறை எங்கே?

by admin

இன்று மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பலரும் பேசுகின்றனர். இந்த விடயத்தில், ஆங்காங்கே வெவ்வேறு கதைகளைச் சொல்வதை விடுத்து, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வெளிப்படையான மற்றும் துல்லியமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது உகந்தது. வெளிப்படையான மற்றும் நேர்மையான விசாரணையை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கூட ஸ்கொட்லாந்து யார்ட் காவற்துறையினரை அழைத்து விசாரணைகளை நடத்துவதாக கூறினாலும், இதுவரையில் அதை நாடவே இல்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடுவதில் அவருக்கு விருப்பமில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தொடர்பான விசாரணைகளை மறைத்து வருவதிலும் ஈடுபாடு காட்டாமையும் பலத்த சிக்கலையும் கேள்விகளையும் எழுப்பி நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் துயரம் காரணமாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எந்தவொரு நபரையும் பாதுகாக்க வேண்டிய தேவை ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லாததால் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நாம் மேற்கொள்வோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமாக்கப்பட்ட தேவாலயங்களை புனரமைப்பதில் முக்கிய பங்காற்றியவன் என்ற வகையில், இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More