Home இலங்கை டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக அறிவிப்பு

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக அறிவிப்பு

by admin

 

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு  நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல்  நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகேவின் பதவி 2024 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளதாக  நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்  மூலம் அறிவித்துள்ளார்.

1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க  நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) பிரிவின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More