Home இலங்கை இலங்கை கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம், டயானா ஒப்படைத்தார்!

இலங்கை கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம், டயானா ஒப்படைத்தார்!

by admin

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பயன்பாட்டிலிருந்த தனது கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டயானா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்து உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.  இதற்கமைய, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதை தடுத்து நீதிமன்றத்தினால் எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, டயானா கமகே வெளிநாடு செல்லவதற்கும் தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் திலின கமகேவினால் கடந்த 9 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தார்.

அத்துடன் முறையற்றவிதத்தில் பதவியை பெற்றுக்கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அரசாங்கத்திற்கு சொந்தமான மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களையும் கடந்த 10ஆம் திகதி அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.

இதேவேளை கடந்த 15 ஆம் திகதி டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஜந்து மணித்தியாலங்கள் வாக்குமூலமொன்றையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More