Home இலங்கை புலிகளின் அன்பு முகாமில் புதையல் தேடியோர் கைது!

புலிகளின் அன்பு முகாமில் புதையல் தேடியோர் கைது!

by admin

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய காவற்துறைஅதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (07.06.24) இரவு 10.30 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கானர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்போது காவற்துறை  தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் காவற்துறை  பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கைதானவர்கள் இராமநாதபுரம் காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More