Home இலங்கை கிருமித் தொற்றால் மரணம்

கிருமித் தொற்றால் மரணம்

by admin

 

கண்ணாடித் துண்டுகள் வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாததல் , கிருமித் தொற்று ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த தயாரூபன் உதயகுமாரி (வயது 50)  எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு மாத கால பகுதிக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு காலில் கண்ணாடி துண்டுகள் வெட்டி , உரிய சிகிச்சை பெறாதமையால் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இருந்தும் குணமாகதாதல் கடந்த 03ஆம் திகதி யாழ் , போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிருமி தொற்று ஏற்பட்டமையால் , மாரடைப்பு ஏற்பட்டு , மரணம் சம்பவித்துள்ளதாக  உடற்கூற்று பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More