Home இலங்கை நெல்லியடி காவல்நிலைய பொறுப்பதிகாரி லஞ்சம் பெற்றுக்கொண்டு என் மீது தாக்குதல் நடாத்தினார்

நெல்லியடி காவல்நிலைய பொறுப்பதிகாரி லஞ்சம் பெற்றுக்கொண்டு என் மீது தாக்குதல் நடாத்தினார்

by admin

 

நெல்லியடி  காவல் நிலைய பொறுப்பதிகாரி வெளிநாட்டவரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, தன்மீது தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த கிரிதரன் என்பவர் குற்றம் சுமத்தியுள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில்,

நான் தற்போது வசித்து வரும் வீடு தொடர்பில் பிறிதொரு நபர்களுடன் பிரச்சனை உள்ளது.
குறித்த பிரச்சனை சிவில் வழக்கு என்பதால், காவல்துறையினர் நேரடியாகத் தலையிடமுடியாது. முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருக்க வேண்டும்.

மாறாக எதிராளிகளிடமிருந்து அதாவது வெளிநாட்டவரிடமிருந்து இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக எனது வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி எனது உடமைகளை தூக்கி வெளியே எறிந்தனர்.

அத்துடன் காவல்துறையினரின் ஆதரவுடன் என்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நான்கு நாட்களாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளேன்.

காவல்துறையினரின் இவ் அடாவடி தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிலும், மாவட்ட பிராந்திய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டுள்ளேன். மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

காவல்துறையினர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு செய்யப்படும் விதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவைச் சென்றடையும் வகையில் இதனை நான் வெளிக்கொணர்வதாக மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More