Home இலங்கை புகையிரதத்தில் தீவிபத்து

புகையிரதத்தில் தீவிபத்து

by admin

 

களுத்துறையில் இருந்து மருதானைக்கு  செல்லவிருந்த புகையிரதத்தில்  களுத்துறை புகையிரத  நிலையத்திற்கு அருகில் வைத்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக  கரையோர  புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.   புகையிரதத்தின் பின் இயந்திரத்தில் தீ பரவியதையடுத்து களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

இன்று (15) காலை 7 மணியளவில்   இந்த சம்பவம் இடம்பெற்றதாக தொிவித்துள்ள   புகையிரத திணைக்களம்  தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும்  தெரிவித்துள்ளது.  மேலும் , குறித்த  புகையிரதத்தில்  பயணித்த  பயணிகள் மற்றுமொரு    புகையிரதம் மூலம் மருதானைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More