Home இலங்கை அரியாலை புதிதாக அமைக்கப்படவுள்ள கண் வைத்தியசாலை

அரியாலை புதிதாக அமைக்கப்படவுள்ள கண் வைத்தியசாலை

by admin

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்தியசாலை அமைக்க என நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மர நடுகை செய்யப்பட்டது.  அரியாலை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சுப்பிரமணியம் பாலேந்திரா, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் அரியாலை பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் காணியை கண் வைத்தியசாலைக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அக் காணியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தலைமையில் மரநடுகை செய்யப்பட்டது.   நிகழ்வில் யாழ் . போதனா வைத்தியசாலை உதவி பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா , கண் வைத்திய நிபுணர் வைத்தியர் மலரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குறித்த காணியில் கண் வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் , அது வடமாகாண மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் , நன்கொடையாளர்கள் , பொதுமக்கள் வைத்தியசாலை நிர்மாணிப்புக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More