Home இலங்கை முறையற்ற விதத்தில் பேருந்தை செலுத்தியவருக்கு எதிராக நடவடிக்கை

முறையற்ற விதத்தில் பேருந்தை செலுத்தியவருக்கு எதிராக நடவடிக்கை

by admin
யாழ்ப்பாணத்தில் வீதியின் முறையற்ற விதத்தில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொலிகள் பகிரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண நா.வேதநாயகன் அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறான சாரத்தியத்துக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அமைவாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More