வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கலவான பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றன.
பொல்கொடுவே கடா என்றழைக்கப்படும் செல்வந்த வாகன வர்த்தகர் ஒருவர் போலியான ஆவணங்களுடன் வாகனங்களை விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது, வாகனங்கள் சாதுர்யமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தொிவித்துள்ள காவல்துறையினா் சுற்றிவளைப்பின் போது அச்சமடைந்த சந்தேக நபர் மயக்கமடைந்து இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனா்.