Home இலங்கை உழவு இயந்திரம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு

உழவு இயந்திரம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் . நெடுந்தீவு பகுதியை சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்த போது , பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மதகுக்கு அருகில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.
அதில் காயமடைந்த இளைஞனை மீட்டு  நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு   காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More