Home இலங்கை பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியில் மாடுகளை கடத்தியவர் கைது 

பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியில் மாடுகளை கடத்தியவர் கைது 

by admin

 

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி காவல்துறையினா் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும்   கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த பாரவூர்தியை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன் போது , பாரவூர்திக்குள் 18 மாடுகள் , மிக நெருக்கமாக அடைக்கப்பட்டு இருந்தன. குறித்த பாரவூர்தி மாடுகளை கடத்தி செல்லும் போது , காற்று வருவதற்காக மேல் பகுதிகளில் சில பகுதிகள் விலக்கப்பட்டு இருந்ததுடன் , உள்ளே மாடுகளை கட்டி வைப்பதற்காக கம்பிகள் பொருத்தப்பட்டும், மாடு கடத்தல்களுக்காக என பிரத்தியோகமாக பரவூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்ட நபரிடம் சாவகச்சேரி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More