Home இலங்கை வடமராட்சி கிழக்கில் 123 கிலோ கஞ்சா மீட்பு

வடமராட்சி கிழக்கில் 123 கிலோ கஞ்சா மீட்பு

by admin

 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில்  123 Kg கேரள கஞ்சா நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து   காவல்துறை விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதியில் கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது கடற்கரையை அண்டிய பற்றை ஒன்றினுள் இருந்து 123Kg  கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. அதனை அடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவல்துறை யினரிடம் மீட்கப்பட்ட கஞ்சா ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More