Home இலங்கை .ரிக் ரொக் நேரலைகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வந்தவர் விளக்கமறியலில்

.ரிக் ரொக் நேரலைகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வந்தவர் விளக்கமறியலில்

by admin
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்டவாறு , பலவேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்த நபர்  காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  புலம்பெயர் நாடொன்றில் இருந்து யாழ்ப்பாணம்  சென்றுள்ள நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை வீடியோக்களை பதிவிட்ட வாறு பல்வேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்துள்ளார்.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் வீடியோ பதிவிட்டவாறு , வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என அனைவருடனும் முரண்பட்டுக்கொண்டார்.
அதுபோன்று சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாமம் காவல்நிலையத்தினுள் சென்று , காவல்துறையினா்   முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக நேரலை வீடியோக்களை வெளியிட்டு , காவல்துறையினருடனும் முரண்பட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்கு சென்று , மாணவிகள் , அவர்களின் அனுமதியின்றி , ரிக் ரொக் தளத்தில் நேரலையில் காணொளிகளை பதிவிட்ட போது , பாடசாலையில் கடமையில் நின்ற காவல்துறையினா்   அதிபரின் அனுமதியின்றி மாணவிகளை காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய போது , காவல்துறை   உத்தியோகஸ்தர்களுடனும் முரண்பட்டு , அவற்றினையும் காணொளிகளாக வெளியிட்டார்.
குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , காவல்துறை    உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில்  குறித்த நபரை கைது செய்த கொடிகாம காவல்துறையினா்  விசாரணைகளின் பின்னர் அந்நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More