Home இலங்கை வாழ்வழிப் புற்றுநோயால் இலங்கையில் தினமும் 3 மரணங்கள்

வாழ்வழிப் புற்றுநோயால் இலங்கையில் தினமும் 3 மரணங்கள்

by editorenglish

இலங்கையில் வாய்வழி புற்றுநோயால் தினமும் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என்று வாய்வழி மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆனந்த் ரத்நாயக்க கூறியுள்ளார்.

உலக வாய்வழி சுகாதார தினம்  வியாழக்கிழமை (20/03/2025)  அன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள சுகாதார மேம்பாட்டு பணியகம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், புகையிலை, புகையிலை தொடர்பான பொருட்கள் மற்றும் வெற்றிலை ஆகியவை இந்த நோய்க்குப் பங்களிக்கும் புற்றுநோய் காரணிகள் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர் ரத்நாயக்க விளக்கியுள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 3,000 புதிய வாய்வழி புற்றுநோய்கள் பதிவாகின்றன என்று மருத்துவர் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால், வாய்வழி புற்றுநோயை எளிதாக நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

புகைபிடித்தல் மற்றும் வெற்றிலை மெல்லுதல் ஆகியவையே இந்த கொடிய நோயின் வளர்ச்சியில் முக்கிய ஆபத்து காரணிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகையிலை மற்றும் வெற்றிலை நுகர்வுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களை இந்த ஆபத்தான புள்ளிவிவரங்கள் தெளிவாக நினைவூட்டுகின்றன என்றார்.

மேலும் உயிர் இழப்பைத் தடுக்க விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகால கண்டறிதலின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More