Home இலங்கை பட்ரிக் கிருஷ்ணராஜாவுக்கு மரணதண்டனை

பட்ரிக் கிருஷ்ணராஜாவுக்கு மரணதண்டனை

by admin

 

கடந்த  2015 ஆம் ஆண்டு  விடுதி ஒன்றில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை ஒரு பயணப் பைக்குள் அடைத்து கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் வைத்து விட்டுச் ச் சென்ற  வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட  ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் தர்மராஜா கார்த்திகா என்ற பெண்ணை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் வைத்துச் சென்றிருந்த சம்பவம் தொடர்பில் பட்ரிக் கிருஷ்ணராஜா என்ற நபருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

நீண்ட விசாரணைக்குப் பின்னா் , கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே   குறித்த  குற்றச்சாட்டுகள் தொடா்பில்  பிரதிவாதியைக்  குற்றவாளி எனக் கண்டறிந்து  இரணதண்டனை தீர்ப்பை அறிவித்துள்ளாா். ,

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையான  பிரதிவாதி,  தான் நிரபராதி என்று குறிப்பிட்டார்.    எனினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரைக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More