170
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்சின் இறுதிச் சடங்கை ஒட்டி, இலங்கை அரசாங்கம் எதிா்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமையை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.. மறைந்த பாப்பரசரின் உலக அமைதி மற்றும் இலங்கைக்கு அவர் ஆற்றிய இரக்கமுள்ள பங்களிப்புகளுக்கு செலுத்தும் மரியாதை செலுத்தும் வகையில், பொது நிர்வாக அமைச்சகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அன்றையதினம் அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக மாகாண சபை மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது
Spread the love