Home உலகம் பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை

by admin

 

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியத்தில்  பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  பாதுகாப்பு விவகாரங்களுக்காக ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம்   உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளதுடன்   சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா வெளியிட்ட அறிவிப்புக்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

இந்தநிலையில்  பாகிஸ்தானும் முக்கியமான சில  தீர்மானங்களை எடுத்துள்ளது. . 1972ம் ஆண்டு இரு நாடுகளுக்குமிடையே போடப்பட்ட     போர்நிறுத்த ஒப்பந்தமான,   சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. 1971ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரை நிறுத்தும் வகையில்   சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டு அரசு. இந்தியா உடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்கும் உரிமையை பயன்படுத்த  முடிவு. செய்துள்ள நிலையில்  அடுத்த 48 மணி நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன்  இந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் எனவும் வாகா எல்லை வழியான அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்வதாக வும்பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அத்துடன்  இந்தியா உடனான வர்த்தகத்துக்கும் முழுமையாக தடை விதித்துள்ளது

. பாகிஸ்தானுக்குள் பாயும் நதிநீரை இந்தியா தடுத்தால் அதனை போர் நடவடிக்கையாக கருதி பதில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்   எச்சரிக்கை விடுத்துள்ள பாக்கிஸ்தான் தனது  வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்கவும்  தடை விதித்துள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More