மட்டக்குளிய, மோதரைப் பகுதியில் இளைஞன் ஒருவரை கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லுகளால் தாக்கி படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பபட்ட ஏழு போில் ஐவரை குற்றவாளியாக இனங்கண்டகொழும்பு மேல் நீதிமன்றம் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது,
ஏனைய இருவருக்கும் தற்போது 27 வயது மற்றும் 29 எக்ற போதிலும் இருவரும் சம்பவம்இடம்பெற்ற போது, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களாக இருந்தமையினால் . அவா்கள் இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளிய, மோதரை பகுதியில் வீடொன்றில் வைத்து, 13 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2012ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் 21 வயதான பிரான்சிஸ் சுரஞ்சன் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டிருந்தாா்.
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றங்கள் எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, நிரூபிக்கப்பட்ட மையால், அவர்களைகுற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களுக்கு நேற்று (28) ) இவ்வாறு வா தண்டனை விதித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது, அதில் இருவர் உயிாிழந்து விட்டமையினால் மிகுதி , ஏழு பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது