Home இலங்கை பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு

by admin

 

பட்டலந்த வளாகத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் நிறுவப்பட்டதாகக் கூறப்படுவதை விசாரிக்கும்  பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலகத்தால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தொகுக்கப்பட்ட இந்த அறிக்கை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, அதன் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைத் தொடர கொள்கை முடிவு எடுத்துள்ளது.

சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிவர்த்தி செய்வதில் இது முதல் முறையான படி என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More