Home இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் – விசாரணை நடத்த விசாரணைக் குழு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் – விசாரணை நடத்த விசாரணைக் குழு

by admin

 

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தமைக்கான  காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக  கல்வி, உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு   இது தொடர்பான தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. .

இந்த  மாணவனின் திடீர் மரணம் கூட்டுப் பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஏற்பட்டதாக பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களையும் அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து  வருவதாகவும் . இதுபோன்ற ஒரு சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டால், தற்போதுள்ள சட்டத்தின்படி அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கு  எதிராகவும்  அமைச்சு அதிகபட்ச நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

தற்போதைய  காவல்துறை  விசாரணைகள் மற்றும் பிற உள்ளக விசாரணைகள் குறித்த த சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வெளிப்படுத்தும் வரை, பல்வேறு நபர்களின் தனியுரிமையை  பாதிக்கும்,  இதுபோன்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும்  கல்வி, உயர்க்கல்வி அமைச்சு  தொிவித்துள்ளது

அந்த மாணவனை  முழு நிர்வாணப்படுத்தி,பகடிவதைக்கு உட்படுத்தியமையால், மனமுடைந்த மாணவன், தன்னுயிரை மாய்த்துக்கொண்டாா்  என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More