Home உலகம் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை

by admin

 

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இவ்வாறு  இந்திய வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை எதிர்வரும் 23ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இந்திய மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கமும் ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய விமானங்களை அந்நாட்டு வான்வெளியில்  பறப்பதற்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More