பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தொிவித்து காவல்துறையினடம் பாதுகாப்பு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் கொலை மிரட்டல் விடுத்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, தென்னக்கோன் நேற்று வியாழக்கிழமை பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் எழுத்துப்பூர்வமாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்னகோனை, இம்ரான் மிரட்டியதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவ வழக்கில் தென்னகோன் இரண்டு வாரங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்ததால், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரது இக்கோரிக்கை வந்துள்ளது.
இந்தக் கோரிக்கை தொடா்பில் பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, முறையான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், அது தொடா்பில காவல்துறை திணைக்களம் மதிப்பீடு செய்து அதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளம் எனத் தொிவித்துள்ளாா்.