சுற்றுலாவிற்கு சென்று தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த ஐந்து பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூன்று இளம் பெண்கள் மீட்கப்பட்ட போதிலும் , இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக சிலாபம் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்
காணாமல் போனவர்கள் கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் மற்றும் கலகெதர, வெத்தேவ, நாரங்வல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனவும் தொிவிக்கப்படுகின்றது. கண்டியிலிருந்து சென்ற இந்தக் குழுவில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலும் ஒரு கடை ஒன்றிலும் பணியாற்றுபவர்கள் அடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
அவர்க விடுமுறை பெற்று சிலாபத்திற்கு நேற்று வியாழக்கிழமை (01) சுற்றுலா சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது